முக்கிய செய்திகளின் சுருக்கம் 02.04.2023

Date:

1. தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2. மார்ச் 28 அன்று கொலன்னாவ CPSTLக்குள் பலவந்தமாக நுழைந்ததாகக் கூறப்படும் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் ஏனையவர்களின் நடத்தை குறித்து புலனாய்வு விசாரணையை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

3. மாணவர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பாடப்புத்தகங்களைத் தயாரிப்பதற்கு, கல்வி அமைச்சுடன் ஒருங்கிணைந்து விசேட குழுவொன்றை நியமிக்குமாறு SJB பாராளுமன்ற உறுப்பினர், சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

4. தற்போதைய அரசாங்கம் “டிஜிட்டல்” நவீன இலங்கையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் கூறுகிறார்.

5. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ராஜினாமா செய்ய கோரி போராட்டம் மேற்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியை முன்னிட்டு அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் போராட்ட ஆர்வலர்கள் குழு போராட்டம் நடத்தியது. இக்குழுவை சேர்ந்த பலரை பொலீசார் கைது செய்தனர்.

6. பெரும்பாலான அரசியல்வாதிகள் குறித்து இலங்கையர்கள் ஆழ்ந்த சாதகமற்ற கருத்துக்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதை SLOTS கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. கணக்கெடுப்பின் மூலம் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்மறையான சாதக மதிப்பீடுகளைப் பெறுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மிகவும் சாதகமான மதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன், SLPP தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ குறைந்த சாதகமான மதிப்பீட்டைப் பெற்றுள்ளார்.

7. கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் என்றழைக்கப்படும் சாரா ஜாஸ்மின் மரணமடைந்ததாக கூறப்படும் “சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய” அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க ஆய்வாளர் துறையின் 3வது மற்றும் சமீபத்திய அறிக்கை அவர்களின் முந்தைய அறிக்கைகளுக்கு முரணானது என்று கூறுகிறார்.

8. நெல் கொள்வனவு செய்வதில்லை என்ற அரசாங்கத்தின் திடீர் தீர்மானத்தினால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட ஒன்றிணைந்த விவசாயிகள் அமைப்பின் செயலாளர் புன்ரல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் முன்பு ஒரு கிலோ நெல்லை ரூ.100க்கு அரசு கொள்முதல் செய்ததாக சுட்டிக் காட்டுகிறார்.

9. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் புது டெல்லியில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட ஆகியோர் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய தூணாக இந்திய ரூபாயின் வர்த்தக விரிவாக்கம் பற்றி விவாதித்தனர். மின்சாரம், எரிசக்தி, துறைமுகங்கள், உள்கட்டமைப்பு, சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற துறைகளில் பொருளாதாரத்தை அதிக அளவில் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியா வகிக்கும் பங்கையும் விவாதித்துள்ளனர்.

10. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் தற்போதைய பதிப்பில் அரசாங்கம் எவ்வித அடிப்படை மாற்றங்களையும் கொண்டு வராது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முக்கியமாக புலிகளின் பயங்கரவாதத்தை கையாள்வதில் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட சட்டத்தில் மாற்றம் இல்லை என கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...