பெருந்தோட்ட மக்கள் குறித்து ஜனாதிபதி சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

Date:

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு இலவச காணி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கான யோசனையை நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து அமைச்சரவை அல்லாத அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சின் ஆதரவுடன் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளுர் பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் 4151 பயனாளிகள் இனங்காணப்பட்டு, அந்தக் காணிகளுக்கு உடனடிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் கூட்டுப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...