விமல் இன்று கைதாகக் கூடும்

Date:

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவுக்கு எதிராக இன்று (20) நீதிமன்றத்தில் பொலிஸார் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோதக் கூட்டம் மற்றும் அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

விமல் உள்ளிட்ட குழுவொன்று ரணவிரு நினைவுச்சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தச் சென்றபோது, பொலிஸார் அவர்களை நினைவுச்சின்னம் அருகே செல்ல அனுமதிக்காததால் பதற்றநிலை ஏற்பட்டதுடன் கடும் வாக்குவாதமும் இடம்பெற்றது.

அதன் போது, பொலிஸ் அதிகாரிகளை தள்ளிக்கொண்டு முன்னேற முயன்ற விமல் தரையில் விழுந்த சம்பவமும் இடம்பெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி...

ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என...

பரீட்சை திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...