ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் களவு

0
156

கொழும்பு 10, டார்லி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன கோப்புகளில் அக்கட்சியின் நிர்வாகம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் உள்ளதாக தகவல் வெளியானது. இந்த முறைப்பாடு தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக ஊழியர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here