“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” திட்டம் 50% நிறைவு

Date:

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக “உங்களுக்கு ஒரு வீடு – நாட்டிற்கு நாளை” என்ற வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% வீடு நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி, 2021ல், 12,231 வீடுகள் கட்டும் பணி துவங்கப்பட்டு, அதில், 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 2022ல், 1,465 வீடுகளுக்கான பணிகள் துவங்கப்பட்டாலும், 25 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது 78 வீடுகளின் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்ததுடன், முடிக்கப்படாத வேலைகளை நிறைவு செய்வதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு திறைசேரி 3750 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 14,022 கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிற்கும் ஒரு வீடு வீதம் 14,022 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு

சிலாபம் - தெதுறு ஓயாவில்நீராடச் சென்று காணாமல் போன ஐ ஐவரின்...

கர்நாடக துணை முதல்வருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கர்நாடக துணை முதல்வர்...