தெய்வாதீனமாக உயிர் தப்பிய இராஜாங்க அமைச்சர்!

0
44

இன்று (16ம் திகதி) அதிகாலை 12.45 மணியளவில் பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில், மஹியங்கனய பிரதேசத்தில் இருந்து எல்ல பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீயினால் இராஜாங்க அமைச்சருக்கோ அல்லது சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை எனவும், பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு, எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here