ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை- திஸாநாயக்க எம்.பி. நம்பிக்கை

Date:

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறுவதற்கான முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் நம்புகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார் .

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பினர் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம். அவ்வாறு இல்லாவிட்டால் 113 எம்.பிக்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம். இது சவாலுக்குரிய விடயம். எனவே, அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன்

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி ஐக்கியமாகவே முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...