இலங்கைக்கு வெங்காய சலுகை வழங்கும் இந்தியா

Date:

இந்தியாவில் வெங்காயம் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 08.12.2023 முதல் மார்ச் 31.03.2024 வரையிலும் தடைவிதித்திருந்தது.

மேலும் இந்த தடைமக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விலை ஏற்றத்தை தவிர்ப்பதற்காக காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.

முன்னதாக இந்த தடையால் இந்திய வெங்காய ஏற்றுமதியை அதிகளவில் சார்ந்திருக்கும் இலங்கை, வங்கதேசம், நேபாளம்,ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன.

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற பகுதிகளில் வெங்காய விவசாயம் நடைபெற்றாலும் அது அந்நாட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் வெங்காயத்தையே அதிகம் சார்ந்திருந்தது.

தற்போதைய தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவாகஒரு கிலோ வெங்காயத்தின் விலைதற்போது இலங்கை ரூபாயில் 800 (இந்திய ரூ.225) வரையிலும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நட்பு நாடு என்ற அடிப்படையிலும் இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.

அத்துடன் 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...