Tuesday, April 30, 2024

Latest Posts

ஒரு தொகை அமைச்சர்கள் வெளிநாட்டில்

இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் புத்தாண்டு விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை பார்க்க சில எம்.பி.க்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய பின்னர் 24ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு எம்.பி.க்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

இதேவேளை, புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நுவரெலியா சென்றுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.