மக்கள் ரணிலை ஏற்கனவே தெரிவு செய்துவிட்டனர்

Date:

அரசியல்வாதிகளால் விநியோகிக்கப்படும் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக மக்கள் ஏற்கனவே தெரிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

களனியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தேர்தலை இலக்கு வைத்து அரிசி விநியோகம் செய்யவில்லை என்றும், பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவதாகவும் தெரிவித்தார்.

“நாங்கள் தேர்தலை இலக்கு வைத்து இதை செய்யவில்லை. பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இங்கு உள்ளனர். பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்கள் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவை தேர்ந்தெடுத்துள்ளனர். அவரால்தான் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும்” என்று அவர் வலியுறுத்தினார் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...