விருந்து புஃபே, திருமண மண்டபம், கேட்டரிங் கட்டணம் என்பன 40% உயர்வு

Date:

அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் (ACBHCA) விருந்துகள், திருமண மண்டபங்கள் மற்றும் கேட்டரிங் கட்டணங்களை 40% உயர்த்த உள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைக்காலமாக எரிபொருள் விலையேற்றம் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு தட்டு சாப்பாட்டின் விலையையும் பஃபே சேவையையும் நேரடியாக பாதித்துள்ளது. இந்த நெருக்கடியால், குறைந்த பட்ஜெட்டில் உணவை வழங்குவது சாத்தியமில்லை,” என்று அவர் கூறினார்.

எனவே, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட அரங்குகளுக்கு 20% மற்றும் புதிய முன்பதிவுகளுக்கு 40% விலையை உயர்த்துமாறு அனைத்து விருந்து மண்டபம் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்களிடம் தலைவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பலமடங்கு விலைகள் உயர்ந்துள்ள நேரத்தில், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குமாறு, விருந்துகள், திருமண மண்டபங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்களிடம் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...