மாணவர்கள், பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

0
73

நேற்று (25) மாலை நிதியமைச்சில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மே 9ஆம் திகதிக்குப் பின்னர் பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை 500 முதல் 1000 ரூபா வரை குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இங்கு, டொலரின் மதிப்பு குறைந்துள்ளதால், பாடசாலை பை, காலணிகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர், உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி, மே 9ஆம் திகதிக்குப் பிறகு பைகள் மற்றும் காலணிகளின் விலையை 500 முதல் 1000 ரூபாய் வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here