இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,500 மில்லியன் ரூபா வருமானம் !

Date:

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார் .

ஒரு வாரத்தில் அதிவேக வீதியின் வருமானம் 130 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், புத்தாண்டு தினத்தில் நாடு முழுவதும் 1,200 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பயணிகள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் புத்தாண்டு காலத்தில் தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...