Tuesday, May 21, 2024

Latest Posts

அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நினைக்கவேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு ஆதரவளிப்பதே தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.

தாம் ரணிலின் தேவைக்காக கடைக்குப் போகவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் கடைக்குப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம். ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் நாங்கள் அல்ல.

அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம். 2022 மே மாதத்தின் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன. நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார். எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் கடைக்கு போகமாட்டேன். இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் போகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.

நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம். மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம்.

மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை கிழவன், கிழட்டு மைனா என்று அழைக்கிறார்கள். அடுத்ததாக, இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று திருமதி சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள். கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும் என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.

கிழவர்கள் என்று சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.