ரயில் – ஆட்டோ மோதி விபத்து, இரு மாணவர்கள் உட்பட மூவர் பலி!

Date:

வெலிகமை – பெலேன ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்று ரயிலில் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

நேற்று பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பணித்துக்கொண்டிருந்த ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் பயணித்துள்ளார். விபத்தின் போது 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, 12 வயது பிள்ளையும் அவரது தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிகம மோதரவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பின் ஆட்சி NPP வசம்

கொழும்பின் புதிய மேயராக NPP-யின் Vraie Cally Balthazar தேர்ந்தெடுக்கப்பட்டதால், பசுமைக்...

அடுத்த தேர்தலுக்கு முன் எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில்

அடுத்த தேர்தல் நடைபெறும் நேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகளும் சிறையில்...

சீனி ஊழல் முடிவுக்கு வந்தது

2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக...

யாழ் மாநகரின் முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று...