பதவி விலகத் தயாராகும் நிதி அமைச்சர்

Date:

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பொறுப்பை ஏற்கக்கூடிய ஒருவருக்கு தனது நாடாளுமன்ற மற்றும் அமைச்சுப் பதவிகளை நன்கொடையாக வழங்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சரியான முறையில் கையாளாவிடில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

எனவே, கட்சிகளாக பிரிந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபடாமல், வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயன்ற பங்களிப்பை வழங்குவது அனைவரினதும் தேசிய பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...