தொடர் மழை ; ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

0
186

பதுளை, காலி, கேகாலை, மாத்தளை மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று விடுத்துள்ளது.

ஹல்துமுல்ல, ஹாலி எல, பத்தேகம, யக்கலமுல்ல, பல்லேபொல, பசறை, எல்பிட்டிய, நாகொட, கொட்டபொல மற்றும் பஸ்கொட ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயல்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மழை தொடர்ந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றும் சிய கட்டிட ஆராய்ச்சி நிறுவ எச்சரித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here