இலங்கை போக்குவரத்து சபை எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,
இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடியில் இருந்து வெளிவர இன்னொரு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை அனைவரும் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது. ஆனால் 2025ஆண்டுக்குள் ஒவ்வொரு டிப்போவையும் இலாபமீட்டும் டிப்போக்களாக மாறியமைப்போம்” – என்றார்.
N.S