இலங்கைக்கு மேலும் கடன் சலுகை வழங்க இந்தியா இணக்கம்

Date:

இலங்கைக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட 4 பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த தொகை கடந்த மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.

இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இந்திய தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் நிவாரணம் 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“ஒரு பில்லியன் டொலர் கடன் நிவாரணத்தில் இன்னும் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சி இருக்கிறது. அந்த பணத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது’’ என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...