கடுவெல மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் கைது

Date:

கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 09, 2022 அன்று கோல்பேஸ் போராட்ட மைதானத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சந்திக அபேரத்ன மற்றும் பேர ஏரியில் வீசப்பட்ட ஒரு குழுவினரின் காணொளியை வெளியிட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் தான் தாக்கப்பட்டதாக பியத் நிகேஷலா கூறுகிறார்.

இந்த தாக்குதலுக்கு நேற்று (10) சந்திக அபேரத்ன உள்ளிட்டோர் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நிகேஷலா தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...