Saturday, July 27, 2024

Latest Posts

கடுவெல மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் கைது

கடுவெல மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (10) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலாவை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 09, 2022 அன்று கோல்பேஸ் போராட்ட மைதானத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சந்திக அபேரத்ன மற்றும் பேர ஏரியில் வீசப்பட்ட ஒரு குழுவினரின் காணொளியை வெளியிட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் தான் தாக்கப்பட்டதாக பியத் நிகேஷலா கூறுகிறார்.

இந்த தாக்குதலுக்கு நேற்று (10) சந்திக அபேரத்ன உள்ளிட்டோர் கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், தாக்குதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நிகேஷலா தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.