மக்களுக்காக போராடுபவர்களின் உயிர்களுக்கு ஆபத்து!

Date:

மக்களுக்காக போராடியவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்தான சூழ்நிலை நாட்டில் உருவாகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் பட்டியலை சமூக வலைதளங்களில் பரப்பி, அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்றைய தினம் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலா கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தொடர் தாக்குதல்களின் ஒரு வடிவம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குண்டர் தாக்குதலுக்கு உள்ளான பியத் நிகேஷலாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது மோசமான நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...

லயன் அறைகளில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுங்கள் – சஜித் பிரேமதாச

நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அன்னளவாக...

சௌமியமூர்த்தி தொண்டமானின் 26 வது சிரார்த்த தினம் இன்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 26...