Saturday, July 27, 2024

Latest Posts

பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொடூரக் கொலை

மருதங்கேணி, தலையடியில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மருதங்கேணியை வசிப்பிடமாகக் கொண்ட 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடித் தொழிலுக்குச் சென்று திரும்பிய அவரது கணவர், கழிவறைக்கு அருகில் அவரது உடலை கண்டெடுத்தார்.

பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.