தேசபந்துவை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் நாளை வரை விளக்கமறியலில்

Date:

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இருவரையும் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் முகமூடியுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேக நபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...