துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கும் அனுமதி

Date:

நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் வழங்கியுள்ளது.

திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் கொழும்பில் அமைதியான முறையில் இயங்கிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கோபத்தில் பதிலடி கொடுத்ததில் இருந்து பல வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.

அமைதியின்மை வெடித்ததில் இருந்து பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளன.

மக்களை தாக்கி சொத்துக்களை சூறையாடு வதை தடுக்கும் வகையில் இராணுவத்திற்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சினால் துப்பாக்கி சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைப் பின்பற்றி இலங்கை காவல்துறை, நாட்டில் மேலும் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பொலிஸாருக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...