நிவாரண வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னரும், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்ததாகவும், இம்முறையும் அவ்வாறே மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதும், மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதும், பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதும் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...