நிவாரண வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக தயாரிக்கும் பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னரும், மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கும் வரவு செலவுத் திட்டத்தை ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்ததாகவும், இம்முறையும் அவ்வாறே மேற்கொள்ளப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் மக்களுக்கு அத்தியாவசியமான நிவாரணங்களை வழங்குவதும், மக்களின் வாழ்வாதாரத்தை உருவாக்குவதும், பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவதும் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ரணில் ஏற்கனவே பல வெளிநாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...