மேல் மாகாணஅனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று பூட்டு ஏனைய மாகாண பாடசாலைகள் வழமை

Date:

இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை வழமை போன்று நடத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றய தினம் பாடசாலைகளை நடத்துவது குறித்த தீர்மானம் அரச பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளன.

இதேவேளை, நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால் பாடசாலை பாட காலங்களை நிர்வகிக்க முடியாதுள்ளதாகவும் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...