முன்னாள் லெப்டினன்ட் பொலிஸாரால் கைது

0
195

அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் வீடுகளுக்கு சேதம் விளைவிக்குமாறு சமூக ஊடகங்களில் பதிவை பதிவேற்றம் செய்து பொதுமக்களை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் லெப்டினன்டாக கடமையாற்றிய போது முறைகேடான நடத்தை காரணமாக 2020 ஜனவரி 29 ஆம் திகதி இராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர் அக்டோபர் 29, 2010 அன்று இராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் அவரது கட்டளை அதிகாரியின் கையொப்பத்தை போலியான குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

உயர் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவிப்பதில் கவனம் செலுத்துவதற்காக, அண்மைய குழப்பத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குழுக்களை அழைத்து சந்தேக நபர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று அத்தனகல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்முன்னாள் லெப்டினன்ட் பொலிஸாரால் கைது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here