Saturday, July 27, 2024

Latest Posts

இலங்கை மின்சார சபை இந்த ஆண்டு மின் கட்டணத்தை திருத்தவில்லை என்றால் 230 பில்லியன் ரூபா இழப்பு !

இவ்வருடம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால், இலங்கை மின்சார சபைக்கு கிட்டத்தட்ட ரூ. 230 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபையினால் திருத்தப்பட்ட யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த முன்மொழிவுகள் தற்போது ஆணையத்தால் மதிப்பீடு செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும், அரசாங்கம் கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கியவுடன் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான முடிவை PUCSL எடுக்கும் என்று ரத்நாயக்க கூறினார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.