முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் 17 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொறியியலாளர் ஒருவரை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்று கூறிக்கொள்ளும் சிவலிங்கம் ஆரூரோன் என்ற பொறியியலாளர் தமக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லை என வழக்குத் தொடுத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வழங்கிய நோட்டீசை கவனத்தில் கொண்ட நீதிபதி அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.
பயணித்த காரை வெடிகுண்டு வீசி கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.