ஜனாதிபதி குறித்த யோசனை விடயத்தில் எதிர்கட்சிகளுக்குத் தோல்வி

0
153

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

இதற்கமைய, இந்த யோசனையை சுமந்திரன் எம்.பி. முன்மொழிந்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை முன்னெடுக்க வேண்டாமென 119 வாக்குகளும், குறித்த பிரேரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி 68 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளை நிலையியற் கட்டளைக்கு அமைவாக முன்னெடுப்பதோடு, சுமந்திரன் எம்.பியின் யோசனையை நிராகரிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here