ரணில் அணியால் புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்ந்தும் தாமதம்

0
241

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் 12ஆம் திகதி பதவியேற்று இன்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் மாத்திரமே அமைச்சரவையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்த சில அரசியல்வாதிகள் புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ள உள்ளதன் காரணமாகவே புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை அடுத்த வாரத்தில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here