வீட்டுக்கு அனுப்பப்பட்டார் பொலிஸ் மா அதிபர், தேசபந்து இடமாற்றம்

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ஆம் திகதி கோட்டாகோகம கிராமத்தில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே பொலிஸ் மா அதிபரின் கட்டாய விடுப்புக்கும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இடமாற்றத்துக்கும் காரணம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...