எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயம் போட்டியிடுவேன் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் இழிந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற வானவில் வண்ணக் கூட்டணியை உருவாக்கி எதிர்காலத்தில் நாட்டின் அதிகாரத்தை நிலைநாட்ட தயாராக உள்ளேன் என்றார்.
பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.