வடிவேல் சுரேஷ் மீது சஜித் ஒழுக்காற்று நடவடிக்கை

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த விவகாரம் வியாழக்கிழமை (25) விவாதிக்கப்படும் என்றும் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.யின் தீர்மானம் எஸ்.ஜே.பி எடுத்த முடிவை மீறுவதாகும் என பண்டார தெரிவித்தார்.

PUCSL தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை நேற்று 123 ஆதரவாகவும், 77 எதிராகவும் பெற்று பாராளுமன்றம் நிறைவேற்றியது.

எதிர்கட்சி எம்.பி.க்கள் மற்றும் ‘சுயேட்சை’ என அழைக்கப்படும் எம்.பி.க்களில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர் வடிவேல் சுரேஷ் எம்பி ஆவார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...