ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் மேலும் இரு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மற்றும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவின் திஸாநாயக்க ஆகியோர் ஆளுநர் பதவிகளைப் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.