தினேஷ் ஷாப்டரின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்று தோண்டி எடுக்கப்பட்டதுடன், ஷாப்டரின் சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஆரம்பமாகவுள்ளதுடன், ஐந்து பேர் கொண்ட சட்ட வைத்திய நிபுணர் தலைமையில் இது இடம்பெறவுள்ளது.
மருத்துவ குழு-நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் பேராசிரியர் அசேல மெண்டிஸ், ருஹுணு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவ பேராசிரியர் யு.சி.பி பெரேரா, பேராதனை பல்கலைக்கழகத்தின் தடயவியல் பேராசிரியர் தினேஷ் பெர்னாண்டோ, பி.ஆர்.ருவன்புர, கராபிட்டிய வைத்தியசாலையின் தடயவியல் நிபுணர் மற்றும் கண்டி தேசிய மருத்துவ நிபுணர் மருத்துவமனை தடயவியல் நிபுணர் எம்.சிவசுப்ரமணியம் ஆகியோர் அடங்குவர்.
கடந்த டிசம்பர் 15ஆம் திகதி, பொரளை பொது மயானத்தில் காரில் கைகளும் கழுத்தும் கட்டப்பட்ட நிலையில் அவரது நிறுவனத்தின் அதிகாரியொருவரால் ஸஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவு அவர் உயிரிழந்தார்.
தினேஷ் ஷாப்டரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, சரம் கொண்டு கழுத்தை நெரித்ததாலேயே அவரது மரணம் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், இலங்கையின் வர்த்தக துறையில் ஜாம்பவான்களாக இருந்த தினேஷ் ஷாப்டரின் மரணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அது நடந்த விதம் குறித்து எழுந்த கேள்விக்குரிய சூழ்நிலை காரணமாக நாடு குழப்பமடைந்தது. ஆனால் மர்மம் கலந்த அறிக்கைகள் கிடைத்ததையடுத்து சட்ட வைத்திய அதிகாரி தனது முழு பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாப்டரின் மரணத்திற்கு வேறொரு காரணமும் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், சயனைட் விஷமும் கலந்ததாலேயே தினேஷ் ஷாப்டரின் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சயனைட் விஷம் கலந்த சிற்றுண்டியை உண்டதாகவும், வயிற்றிலும், இரத்தத்திலும் சயனைட் விஷம் காணப்பட்டதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளதாக ஷஃப்டரின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஷாப்டரின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையில் ஐவர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளதுடன், அதன் பின்னர் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.