மஹிந்தானந்த பிணையில் விடுதலை

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

50,000 ரூபா பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தரமற்ற சேதனப்பசளை இறக்குமதிக்காக சட்டரீதியான அனுமதியைப் பெறுவதற்கு முன்னதாக நாணயக் கடிதத்தை விடுவித்தமையால் அரசாங்கத்திற்கு 130 கோடி ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...