அரசாங்கத்தை எச்சரிக்கிறார் ஜீ.எல் பீரிஸ்

Date:

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

மக்களின் வாக்குரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அச்சம் காரணமாக அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இலங்கை அரசியலமைப்பின் மூலம் மக்களின் இறையாண்மை நேரடியாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக பொதுமக்களை திரட்டி சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...

இலங்கை கிரிகெட்டுக்கு யார் அடுத்த தலைவர்?

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட்...

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும். இலங்கை தொழிலாளர்...