வடக்கு மாகாணத்தின் ஓர் செயலாளரை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு அமைச்சர் ஒருவர் தனது பரிந்துரையை ஜனாதிபதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகிய இருவரிடம் முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
வடக்கு மாகாணத்தில் அமைச்சு ஒன்றின் செயலாளராக தற்போது பணியாற்றுபவரையே இவ்வாறு மாவட்ட அரச அதிபராக நியமிக்குமாறு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
மாவட்ட அரச அதிபர் நியமனம் என்பது அமைச்சரவை அங்கீகாரத்துடன் இடம்பெறும் ஓர் நியமனமாகும்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நியமனம் தொடர்பில் ஏதும் பிரஸ்தாபிக்கப்படாதபோதும் பதில் அரச அதிபராக கனகேஸ்வரனை நியமித்தமைக்கான அமைச்சரவை அங்கீகாரமே வழங்கப்பட்டது.