பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் துப்பாக்கியை எடுத்து சுடமுயற்சித்துள்ளனர்.
உடனடியாகவே அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது துப்பாக்கியுடன் வந்த நபர் தப்பியோடிய தாகவும் அவருடன் வந்தவர் பிடிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை விசாரித்த போது அவர் சி.ஐ.டி என தெரியவந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் சுஹாஸ் தெரிவித்தார்.