விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று வித்தியாசமான ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“சில பதவிகள் கிடைப்பது, ஏற்கனவே இருந்தவற்றையும் இழக்கச் செய்வதற்காகத்தான்.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராகப் பெயர் பெற்ற சுகத் திலகரத்ன, 2024ஆம் ஆண்டில் முதன்முறையாக நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தார். பின்னர் அவர் பிரதியமைச்சர் பதவியையும் பெற்றார்.
எனினும், அண்மைக் காலமாக சில காரணங்களால் அவர் அதிருப்தியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகி வெளிநாடு செல்லத் தயாராக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
அவர் வெளியிட்டுள்ள இந்த பேஸ்புக் பதிவு, அந்த வதந்திகளுடன் தொடர்புடையதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
