வைத்தியசாலையில் டிக்கெட் வெட்டிய துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில்

Date:

கைது செய்யப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா, நேற்று (03) பிற்பகல் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையின் 18வது வார்டில் சிகிச்சை பெற்று வந்த துமிந்த சில்வா நேற்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய போதிலும், சுகவீனம் காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியிருந்த போதிலும், அவர் தாக்கல் செய்த மனுவையடுத்து உச்ச நீதிமன்றத்தினால் பொதுமன்னிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...