நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நதாஷாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத்துறை கடந்த மே 31 ஆம் திகதி அவரை கைதுசெய்தது. SL VLOG’ உரிமையாளரை அன்றையதினம் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நாட்டை விட்டு வெளியேற முயன்றபோதே CID யினர் அவரை கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...