நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நதாஷாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத்துறை கடந்த மே 31 ஆம் திகதி அவரை கைதுசெய்தது. SL VLOG’ உரிமையாளரை அன்றையதினம் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நாட்டை விட்டு வெளியேற முயன்றபோதே CID யினர் அவரை கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக்...

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...