சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநர் இவர்தான்

0
189

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ நாளை (10) முதல் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

டிக்கிரி கோபிபேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி சப்ரகமு மாகாண ஆளுநராக டிக்கிரி கோப்பேகடுவவை நியமித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்வரும் காலங்களில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here