Friday, May 3, 2024

Latest Posts

இலங்கை உரப் பிரச்சினைக்கு தீர்வு – இந்தியாவுடன் ஒப்பந்தம்

நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியது.

இது சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வரியை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.

உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த கடன் வசதி எதிர்வரும் சிறுபோக பருவத்தில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.