இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் இல்லை

Date:

இவ்வருடத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என நம்புவதாக வெகுஜன ஊடக அமைச்சில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டதற்கு, தன்னிடம் போக்குவரத்து அமைச்சு இருப்பதாகவும், அதற்கான வேலைகளுக்கு அதாவது வீதிகளையோ அல்லது அரசாங்கத்தையோ தயார்படுத்துவதற்கு பணம் இல்லை எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

நாட்டை ஸ்திரப்படுத்திய பின், சாலைகள், பாலங்கள், மதகுகளை சீரமைக்க போதிய பணம் கிடைத்த பின் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும். இறுதியில், சரியான நேரத்தில் தேர்தலை நடத்த அரசு ஏற்பாடு செய்யும் என்று அமைச்சர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...