Sunday, June 23, 2024

Latest Posts

ரஷ்யாவில் இருந்து இராணுவ வீரர்களை அழைத்து வருவது பற்றி கலந்துரையாடல்

ரஷ்யாவில் போரிடச் சென்ற முன்னாள் இராணுவத்தினரை நாடு திரும்புவது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.