Sunday, May 5, 2024

Latest Posts

பல கோடி பெறுமதி வெளிநாட்டு நாணயங்களுடன் நால்வர் கைது

18.6 மில்லியன் ரூபா மற்றும் 400,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன், மாளிகாவத்தை, ஹெட்டிவீதி, மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் இருந்து 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொனஹேன STF முகாமின் தகவலை தொடர்ந்து, மாளிகாவத்தையில் உள்ள சீ ஸ்ட்ரீட் மற்றும் நூரனியா தெருவில் உள்ள நான்கு நகைக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

வெள்ளவத்தை மற்றும் கொழும்பு 10 மற்றும் 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 51 வயதுடைய நான்கு சந்தேகநபர்கள் பணமோசடி மற்றும் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், சிங்கப்பூர் டொலர், யூரோ, இந்திய ரூபா, குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.