இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மேலும் 106 வீடுகள் கையளிப்பு

0
157

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, ​​இந்திய – இலங்கை உறவுகளில் 3 மைல்கற்கள் எட்டப்பட்டன.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் கூட்டாக மெய்நிகர் ஊடாக திறந்துவைத்தனர்.

அத்துடன், கொழும்பு, திருகோணமலை ஆகிய நகர்களிலுள்ள மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

ரூ. 6 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC) உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் நினைவுப் படிகம் மெய்நிகர் ஊடாக திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்தனர்.

இதில் கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய பிரதேசங்களின் ஆள்ளில்லா கட்டுப்பாட்டு மையங்களும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here