போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே பாதுகாப்பாக திரும்பி உள்ளன. முதன்மை தளமான போர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டுள்ளது.
நமது சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் வேறு எந்த இராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.